முருங்கைக்காயில் அதிக இரும்புச்சத்து உள்ளது. முருங்கைக்காய் நம் உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது நமக்கு தேவையான இரும்புசத்துக்கள், நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் முருங்கைக்காய் கசப்பாக இருக்கும் என்பதால் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இந்த மாதிரி தேங்காய் பால் கலந்து முருங்கைக்காய் சமைக்கும்போது கசப்பு இருக்காது சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 3
பெ. வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு பல் – 3
சோம்பு, கடுகு – தாளிக்க
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன்
திக்கான தேங்காய் பால் – அரை கப்
செய்முறை:
முதலில் முருங்கைக்காயை தேவையான அளவில் நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொண்ணிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதே எண்ணையில் கடுகு, உளுந்து, சோம்பு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிவந்து வரும்வரை வதக்க வேண்டும். பூண்டு பற்களை தட்டி வெங்காயத்துடன் சேர்க்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிறகு தக்காளி, உப்பு சேர்த்து மூடிவைக்க வேண்டும். 2 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் தக்காளி குலைந்து நன்றாக வெந்து இருக்கும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்தவுடன் வதக்கிய முருங்கைகாயை சேர்த்து வேகவிட வேண்டும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
5 நிமிடம் கழித்து தேங்காய் பால், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறிலாம். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுது மிக சுவையாக இருக்கும். வாரம் இரண்டு முறையாவது முருங்கைக்காய் அல்லது முருங்கை கீரையை கட்டாயமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.