சமீபகாலமாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களே., கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை., முக்கிய அறிவிப்பு!!!