வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து
வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பரப்புரையில் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வு கிடைக்கும் என வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இரண்டாம் கட்டமாக தேர்தல் பரப்புரையை முடித்துள்ள மு.க.ஸ்டாலின் தற்போது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிபிசி சேனலுக்கு சீன அரசு தடை – அமெரிக்கா கண்டனம்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்காக விழுப்புரம் மாவட்டம் காணைக்குப்பம் என்ற இடத்தில் தனது மூன்றாம் கட்ட பிரச்சரத்தை துவங்கியுள்ள அவர், மக்களின் மனுக்களை பெற்றும், குறைகளை கேட்டறிந்தும் வருகிறார். பரப்புரை முடிந்த பின்பு பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார் ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது, ‘நாங்கள் கேட்பதை ஆளும்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் அளித்துள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார். விழுப்புரம் வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் உற்சகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.