தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்கள் மற்றும் பரபரப்புகள் காணப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, இன்று நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
புதிய கட்சி விவகாரம்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தற்போது அனைத்து கட்சிகளும் தீவிரமான முயற்சிகளிலும், பணிகளிலும் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் நடிகர்களும் போட்டிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து இருந்த நடிகர் கமல் இந்த ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தன்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து கொண்டார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது தெளிவில்லாத ஒன்று தான். இப்படி இருக்க அடுத்து அனைவரின் கவனமும் முன்னணி நடிகரான விஜயின் மீது திரும்பியது. கடந்த வாரம் அவரது தந்தை புதிதாக ஒரு கட்சியினை தொடங்கினார். விஜய் தான் ஆரம்பித்து இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அதிரடியாக நடிகர் விஜய் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறினார்.
திடீர் ஆலோசனை:
அதே போல் அவரது தாய் சோபா தனது கணவர் தனக்கு தெரியாமல் கட்சியில் பொருளாளராக பொறுப்பேற்க கையெழுத்து வாங்கியதாக குறிப்பிட்டார். இதனால் ஒரே நாளில் ஆரம்பித்து ஒரே நாளில் கட்சி உடைந்து விட்டது. இவ்வளவு நடந்தும் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை.
தொடர்ந்து 125 இடங்களில் பா.ஜ.க., முன்னிலை – பீகார் தேர்தல் நிலவரம் !!
இப்படி குழப்பான சூழல் ஒரு முடிவுக்கு வந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது பண்ணை வீட்டில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ச்சியாக நடந்த சர்ச்சை குறித்து ஆலோசித்திருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.