இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஜேமஸ் ஆண்டர்சன் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் தொடர்:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்து கொண்டு இருக்கிறது.
அதில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அஸர் அலியின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார். அவர் 600 விக்கெட்டுகளை தற்போது வரை கைப்பற்றியுள்ளார்.
பட்டியலில் சேர்ந்த வீரர்:
இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே, ஸ்ரீலங்காவின் முத்தையா முரளிதரன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்காவது வீரராக சேர்ந்துள்ளார்.
ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை 2003 ஆம் ஆண்டு தொடங்கினர். அவர் தற்போது வரை 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சமியை வீழ்த்தி அதிகமாக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றார். அப்போது அவர் 563 விக்கெட்டுகள் பெற்ற வேகப்பந்து வீச்சாளராகவும் ஆனார்.
6️⃣0️⃣0️⃣ Test wickets for Jimmy Anderson ???
He becomes the first fast bowler to ever reach the mark!#ENGvPAK pic.twitter.com/QCaEzxm4NS
— ICC (@ICC) August 25, 2020
இந்த சாதனை புரிந்ததற்காக பலரும் அனைவரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் “ஜிம்மி ஆண்டர்சன்” என்று ஐ.சி.சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.