இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் புதுடெல்லி முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இந்த நோய்கான மருந்தை கண்டறிய பல வல்லுநர்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 60 ஆயிரத்தை கடந்து வருகிறது.
நேற்று மட்டுமே தமிழக்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய தலைநகரான புதுடெல்லி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விகிததில் முன்னணி இடத்தில உள்ளது.
இதுவரை புதுடெல்லியில் 90.04 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். புதுடெல்லியில் கொரோனா தொற்றால் 1,640,71 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்நோயிலிருந்து 1,47,743 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 11,998 பேரில் 4,505 பேர் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.