விஜய் டிவியில் 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் முதன்முதலாக ஒளிபரப்பானது. அதில் பங்கு பெற்ற ஆரவ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றார். தற்போது அவருக்கு திருமணம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரவ்
2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1 இல் ஆரவ், வையாபுரி, ஓவியா , காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த சீசனில் ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பரணி வெளியேற முயற்சித்தது , ஜூலியின் செய்த வேலைகள் போன்ற பல சம்பவங்கள் அந்த சீசனில் நடந்தது.
இதனால் அந்த சீசன் நன்கு பிரபலம் அடைந்தது. பிக் பாஸ் சீசன் 2 மக்கள் மத்தியில் அவ்வளவாக பேச படவில்லை. இது வரையில் 3 சீசன்கள் முடிந்துள்ளன. ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க இருந்த 4 வது சீசன் லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவிற்கு திருமணம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆரவிற்கும் ராஹாவிற்கும் வரும் செப்டெம்பர் மாதத்தில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் ஆக உள்ளதாம். கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜோஸ்வா படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளவர்.