Saturday, May 25, 2024

“இந்த நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை” – ரிசர்வ் வங்கி அறிக்கை!!

Must Read

கடந்த 2019 -2020 ஆம் நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளது.

புதிய 2000 ரூபாய் நோட்டு:

கடந்த 2016 ஆம் ஆண்டு மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது 2000 ரூபாய் நோட்டு. 2016 ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வந்தது. கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சடிக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் கூறப்பட்டது.

demonetization in modi's governance
demonetization in modi’s governance

காரணம், கடந்த ஆண்டு 50.0 சதவீதமாக இருந்த 2000 ரூபாய் நோட்டு புழக்கம் 2019-2020 நிதியாண்டில் வெறும் 22.6 சதவீதமாக குறைந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டது என்னவென்றால் “கடந்த 2019-2020 நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டுகளை கூட அச்சடிக்கவில்லை” என்பது தான்.

அச்சடிக்கப்பட்ட நோட்டுகள்:

கடந்த 2016-2017 நிதியாண்டில் 3.5 பில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும், 2017-2018 நிதியாண்டில் 151 பில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும், 2018-2019 நிதியாண்டில் 47 பில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், 2019-2020 ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை.

stopped the printing of 2000 rupees
stopped the printing of 2000 rupees

அதே போல் இந்த நிதியாண்டில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 178.9 பில்லியன் 2000 ரூபாய் நோட்டுக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் 22 பில்லியன் கரன்சி நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன, அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் தான் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

reserve bank of india
reserve bank of india

இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்து நிதியமைச்சர் அனுராக் சிங் கடந்த மார்ச் மாதம் நடத்த மக்களவை கூட்டத்தில் கூறியது என்னவென்றால் “மக்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனையை வைத்து தான் கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கிறது. இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்துவது தொடர்பான எந்த ஒரு முடிவும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சிக்கிக்கொள்ள போகும்  மனோஜ்-ரோகினி.., வண்டவாளம்  தண்டவாளம்  ஏறும்  தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள  நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -