IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடரின் 70 வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாட தயாராக இருந்தது. ஆனால் நேற்று (மே 19) மைதானத்தில் கடும் மழை பெய்ததால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
மக்களவை தேர்தல் எதிரொலி: பாஜக-விற்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது., திடுக்கிடும் தகவல்!!!
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் ஓர் சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்தாண்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நான்கு அணிகளில் ஒரு அணி கூட இம்முறை தகுதி பெறவில்லை. இப்படி நிகழ்வது இதுவே முதல் முறையாகும். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.