உங்களுக்கு செவ்வாய் தோஷமா?? – அப்போ இந்த பரிகாரத்தை பண்ணுங்க!!

0
sevvai
sevvai

செவ்வாய் தோஷம் நாம் அனைவரும் பயப்படுவதுண்டு. ஏனென்றால் திருமணத்தடை ஏற்பட்டு விடுமோ அல்லது தாமதம் ஆகுமோ என்ற பயம் தான். தற்போதைய காலத்தில் செவ்வாய்தோஷம் இல்லாதவர்களை விட செவ்வாய் தோஷம் உள்ளவர்களே அதிகம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சில பரிகாரங்கள் உள்ளன.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சற்று எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் மேலும் அவர்களுக்கு கோவம் மற்றும் விரைவில் ஒரு செயலை முடிக்க வேண்டும் என அரவமும் அதிகம் இருக்கும். இதனாலேயே சகா தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது சண்டையே ஏற்படுகின்றன. இதனால் தான் பல பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே தான் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சக தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்ய வேண்டும்.

sevvai
sevvai

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதை எவ்வாறு கண்டறிய வேண்டுமென்றால் லக்கினத்தில் இருந்து அல்லது சந்திரன், சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணிக்கையை வைத்தால் 2, 4,6,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு செவ்வாய்தோஷம் என கருதப்படும்.

செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம்

ஆனால் இதற்கு சில மாற்றங்களும் உள்ளன. அதாவது ஒருவருக்கு கடகம் அல்லது சிம்மம் லக்கினமாக இருந்து அவருக்கு செவ்வாய் 2, 4,6,7,8,12 இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. மேலும் செவ்வாயின் நட்பு வீடாகிய சிம்மம், தனுசு, மற்றும் உச்ச வீடாகிய மகரத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது. மேலும் செவ்வாய் நீச வீடாகிய கடகத்தில் இருந்தால் தோஷம் அடிபட்டு போய்விடும்.

பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம்

செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமையில் முருகனை வழிபட்டு வரலாம். 15 வரன்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும். விரைவில் திருமணமும் கைகூடும். ஏழை எளிய மக்களுக்கு, உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here