மறைந்த முன்னாள் முதலமைச்சரான செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியத்தை அடுத்த வழக்குக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அரசுடைமைக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் செல்லுபடி ஆகாது என கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீபக் கூறியிருக்கிறார்.
மனுதாக்கல்:
சென்னை உயர்நீதிமன்றம் தீபக்கின் மனுவை ஏற்று இவ்வழக்கை தொடர அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே ஜெ.தீபாவும் அவருடைய அண்ணன் தீபன் ஜெயலலிதா மறைந்த பின் தாங்கள் இருவரும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்க கூறிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் கார்டனையும், அங்குள்ள அசைய சொத்துக்கள் மற்றும் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்து அவசரச்சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தார் என்று கேள்வியை எழுப்பி உள்ளார். ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளை அறிவித்த பின்னர்தான் இந்த அறிவிப்பை அறிவித்திருக்க வேண்டும் என்று மனுதாக்கலில் கூறியுள்ளார்.
மீண்டும் விசாரணை:
இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடைகிய அமர்வு தலைமையில் இந்த விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் அறிவித்த அவசர சட்டத்துக்கு மாறாக இயற்ற பட்ட சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை அரசு இதழில் வெளியிட்டதால்,இந்த வழக்கு செல்லாது என்றும், தீபக் அவரது வழக்கை தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி தலைமையில் நடந்த அவசரச்சட்ட எதிரான தீர்ப்பில், தீபக்கிற்கு சாதகமான தீர்ப்பையே வழங்கி இவ்வழக்கை முடித்து வைத்தது.