இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை
கடந்த வருடம் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக தொடங்கிய மழை இன்றுவரை சற்றேனும் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் மழை பெய்துகொண்டேயிருக்கிறது. மேலும் தற்போது இலங்கையை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கின் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாமக்கல்லில் ஹனுமான் ஜெயந்தி விழா – பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர்!!
இதை தொடர்ந்து தென் மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்பை தந்துள்ளது வானிலை மையம். மேலும் தமிழகத்தின் பிற உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் அதிராம்பட்டினத்தில் 13.5 செ. மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.