பெண்களிடம் ஆபாச பேட்டி – சென்னை பிரபல யூடியூபர்கள் போலீசாரால் அதிரடி கைது!!

0

சென்னையில் யூடியூபை சேர்ந்தவர்கள் பல பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டியெடுத்துள்ளார்கள். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. தற்போது இதுகுறித்து புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் யூடியூபை சேர்ந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

யூடியூப்:

தற்போதைய காலத்தில் பெரும்பாலான நகரங்களில் மைக்கையும் கேமராவையும் எடுத்து கொண்டு மக்களிடம் கருத்து கேட்டு அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தொடக்கத்தில் பொழுதுபோக்கிறகாக தொடங்கியது இந்த நிகழ்ச்சி. ஆனால் தற்போது இது ஆபாசமான வழியில் சென்று கொண்டுள்ளது. மேலும் தங்களது வீடியோ அனைத்தும் வைரலாக வேண்டும் என்பதற்காகவே சில யூடியூபை சேர்ந்தவர்கள் எல்லை மீறிய கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சென்னையில் உள்ள chennai talk யூடியூப் சேனல் சமீபத்தில் ஒரு விடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ வைரலாகி அனைவராலும் கண்டனத்துக்கு உட்பட்டது. காரணம் பேட்டி எடுப்பவர் ஓர் பெண்ணிடம் தரம் தாழ்ந்த ஆபாசமான கேள்வியை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண்ணும் பதிலளித்து வந்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும் பலபேர் அதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அதிரடி கைது:

தற்போது இந்த வீடியோ குறித்து சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ஓர் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக கூறி chennai talk யூடியூபை சேர்ந்த அபேசன் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு மற்றும் அதன் உரிமையாளர் தினேஷ் ஆகிய மூவரையும் சாஸ்திரி நகரை சேர்ந்த போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று – ரசிகர்கள் ஷாக்!!

மேலும் இவர்கள் மூவரின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here