தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அங்கு சென்று அவர் இந்தியா நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி:
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறப்போகிறது. இதற்காக அனைத்து வேலைகளும் மிக தீவிரமாக செயல்பட்டு நடந்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை தொடங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகள் குறித்தும் தகவல் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா தடுப்பூசி வழங்க போவதாக தகவல் வெளியானது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
டெல்லி செல்லும் எடப்பாடி:
இந்த திட்டத்தை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைப்பார் என்று அறிவித்திருந்தனர். தற்போது புதிதாக ஓர் செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். மேலும் அங்கு சென்று அவர் இந்தியா நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெல்கியாகியுள்ளது.
பெண்களிடம் ஆபாச பேட்டி – சென்னை பிரபல யூடியூபர்கள் போலீசாரால் அதிரடி கைது!!
இவர்கள் இருவரும் சந்தித்து கூட்டணி கட்சிகள் பற்றி பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக அறிவித்துவிட்டது. ஆனால் பாஜக தலைமையில் இருந்து தகவல் இன்னும் வரவில்லை. எனவே கூட்டணி கட்சிகள் மற்றும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பற்றி ஆலோசிக்கலாம் என்று தெரிகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது முதல்வருடன் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் டெல்லி செல்லவுள்ளனர்.