ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தேசிய கொடியுடன் ட்ராக்ட்டரில் பேரணி நடத்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குடியரசு தின விழா முடிந்த பின்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்:
டெல்லியில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை மேலும் கடுமையாகியுள்ளனர். இதனை அடுத்து, வரும் 26 ஆம் தேதி விவசாயிகள் அனைவரும் “கிசான் அணிவகுப்பு” என்று பேரணி நடத்த உள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
குடியரசு தின விழா முடிந்ததும் இந்த பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பில் விவசாயிகள் ட்ராக்டர்களில் தேசியக்கொடியுடன் பேரணி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் நடைபெற இருக்கும் இந்த பேரணி விவசாயிகளின் போராட்டத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன நபர்களுக்கு, ஆன்லைன் கடன் செயலிகளுடன் தொடர்பு – காவல் ஆணையர் எச்சரிக்கை!!
இது குறித்து விவசாய சங்கங்களின் தலைவர் கூறுகையில், “நாங்கள் அனைவரும் அமைதியாக தான் இருப்போம். அதே போலவே தான் இருப்போம். கடைசியில் நடந்த பேச்சுவார்த்தையில் எம்.எஸ்.பி-யில் 23 பயிர்களை வாங்குவீர்களா? என்பது குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து முடியாது என்று தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம். 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் அணிவகுப்பில் அனைவரும் பங்கேற்கலாம். குடியரசு தின விழாவிற்கு பின்பு இந்த பேரணி நடைபெறும்” இவ்வாறாக தெரிவித்துள்ளனர்.