இப்பொழுது வெள்ளித்திரையை விட சின்னத்திரையே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. அதிலும் தற்போதெல்லாம் சீரியலில் நடிக்கும் தம்பதிகள் திருமணம் செய்துக்கொள்வதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ நிகழ்ச்சியில் இதே போல நடந்துள்ளது.
‘பூவே பூச்சூடவா’
சினிமா திரையுலகில் தற்போது பெரும்பாலும் சின்னத்திரையிலேயே மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதிலும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அதிக எதிர்பார்ப்பும் கொடுக்க பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஹிந்தி சீரியலில் தான் மக்கள் ஆர்வம் அதிகமிருந்தது. தற்போது ஹிந்தி சீரியலையே தமிழில் டப்பிங் செய்தும் வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் வெள்ளித்திரையில் மட்டுமே ரொமான்ஸ் சீன்கள் அதிகம் காட்டப்பட்டது. ஆனால் தற்போது சின்னத்திரையிலும் கட்டப்படுகிறது. இதனாலேயே மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் இப்பொழுது வெளியாகும் சீரியலில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையிலும் இணைவது ட்ரென்ட்டாகி வருகிறது. சஞ்சீவ்- ஆலியா மனசா, சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் ஸ்ரீஜா போன்றோர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஜோடிகள்.
அந்த வகையில் ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியலிலும் ஒரு ஜோடி இணைந்துள்ளனர். அதாவது அந்த சீரியலில் நாயகியாக நடிக்கும் ரேஷ்மாவும் ஹீரோவின் தம்பியாக நடிக்கும் மதனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அதனது மதன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சீன நபர்களுக்கு, ஆன்லைன் கடன் செயலிகளுடன் தொடர்பு – காவல் ஆணையர் எச்சரிக்கை!!
அதாவது இந்த புத்தாண்டு நன்னாளில் எனக்கான ஸ்பெஷலான நபருடன் நான் இணைவதை உங்களிடம் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பும், வாழ்த்துக்களும் எப்பொழுதும் எங்களுக்கு இருக்கும். என்று தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மதன். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.