கொரோனா வைரஸை உஹானில் உள்ள பரிசோதனை கூடத்தில் சீனா வேண்டும் என்றே உருவாக்கியது என்று அங்கு பணியாற்றிய வைராலஜிஸ்ட் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ்:
கொரோனா என்ற நோய்க்கிருமி கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹானில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நோய் எப்படி பரவியது யார் மூலமாக பரவியது என்று இது வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது உஹானில் உள்ள வெட் மார்க்கெட்டில் இருந்து பரவியதாகவும், வவ்வால் மற்றும் மீன்களிடம் இருந்து பரவியதாகவும் சீன அரசு கூறி வந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆனால், இதனை யாரும் நம்ப தயாராக இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா தெரிந்து தான் இந்த வைரசை அனைத்து நாடுகளுக்கும் பரப்பி உள்ளது என்று நேரடியாக குற்றம் சாட்டினார். ஆனால், இதனை சீன அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில், தற்போது உஹானில் உள்ள பிரபல வைராலஜிஸ்ட் லீ பெங்க் யான் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதிர்ச்சி அளிக்கும் வீடியோ:
அதில் அவர் கூறிருப்பதாவது “சீனா தெரிந்து தான் கொரோனா வைரஸை அனைத்து நாடுகளுக்கும் பரப்பி உள்ளது. நான் சுகாதாரத்துறையில் தான் பணியாற்றினேன். இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் இது குறித்து எச்சரித்தேன். ஆனால், அவர்கள் என்னை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினர்.”
மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை வளர்க்க வேண்டும் – அமித் ஷா ட்வீட்!!
“எனது பாதுகாப்பு கருதி தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளேன். அவர்கள் ஏன் இந்த வைரஸை தயாரித்தனர் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கான எல்லா ஆதாரங்களும் அவர்களிடம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.