இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் – தடுப்பு முயற்சியில் களமிறங்கிய முப்படைகள்..! மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை..!

0

சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பலருக்கு பரவி உள்ளது உறுதியாகி உள்ளது. இதனை மேலும் பரவாமல் தடுக்க முப்படைகள் மூலம் புதுக்குழு உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

3100 பேர் பலி..!

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3100 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இதுவரை 80,000 பேர் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உள்ளனர். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிலும் பலநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவில் இதுவரை வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இதன் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள் – எப்போது பயன்பாட்டுக்கு வரும்??

இந்தியாவில் 5 பேருக்கு பாதிப்பு..!

இந்தியாவில் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் ஒருவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதனை மேலும் பரவாமல் தடுக்க முப்படைகள் மூலம் 2500 பேர் கொண்ட ஒருகுழு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!

மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை..!

பாரசிட்டமால், குரோமாபெனிகால், மெட்ரோனிடாக்சோல் உள்ளிட்ட 26 மருந்துகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் சீனா, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் மேலும் அவர்களின் விசா ரத்து செய்யும் நடவடிக்கையிலும் இந்திய அரசு இறங்கி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here