சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு (கோவிட் 19) இந்தியாவின் புனே ஆராய்ச்சியாளர்கள் முதற்கட்ட தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளதாகவும் அது அடுத்த 6 மாதத்திற்குள் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை..!
சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி பல உயிர்களை பறித்துள்ள கொரோனா வைரஸிற்கு இதுவரை 1700க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 70,000க்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட்:
கோவிட் 19க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் அமெரிக்காவின் கோடஜெனிக்ஸ் என்ற பையோடெக்னாலஜி நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான முதல்கட்ட தடுப்பு மருந்து தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், 6 மாதத்திற்குள் அது மனிதர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து கூறிய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் ஆதார் பூனவல்லா, நாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி வைரஸ், ஒரிஜினல் வைரஸுக்கு ஒத்ததாக இருக்கிறது எனவே இதன் மூலம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |