முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி மருந்து..!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு ஊசி மருந்தை அமெரிக்கா இன்று சோதனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

முதல் தடுப்பூசி ..!

உலகளவில் இதுவரை கொரோனா வைரசால் 1,56,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

தற்போது ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு இன்று பரிசோதிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பக்கவிளைவு ஏதும் இல்லை..!

இந்த ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து 45 வயதான ஒருவருக்கு செலுத்தி சோதனை நடத்தப்படும். சோதனையின் போது பல்வேறு விதமான அளவுகள் செலுத்தி பரிசோதிக்கபடும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தில் எந்த வைரஸும் இல்லை எனவும் பரிசோதிக்கப்படும் நபருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here