சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காலடி வைத்துள்ளது. மேலும் இது ஒருவரிடம் இருந்து முத்தம் கொடுப்பதன் மூலமும் பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
3000 பேர் பலி..!
சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் 47 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலால் 3000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சீனாவில் மட்டும் 79,000 பேரை கோவிட் 19 தாக்கியுள்ளது. புது டெல்லியில் ஒருவர், தெலுங்கானாவில் ஒருவர் என இரு நபர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிஸ் பண்ணாலும் பரவும்..!
மக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவது, கன்னத்தில் முத்தமிடுவது போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூட வேண்டாம் எனவும் சுகாதார நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |