சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் (கோவிட் 19) இதுவரை 2788 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் அடர்த்தியாக தாடி வைத்திருக்கும் ஆண்களை எளிதில் தாக்கும் என எச்சரித்து உள்ளனர்.
உலகின் பல நாடுகள் பாதிப்பு..!
கொரோனா வைரஸினால் தென் கொரியா போன்ற நாடுகளும் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன. இதை கட்டுப்படுத்த முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் செயல்முறை முடிவடையவும் இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
தாடி வைத்திருந்தால் ஈசி ஆக வைரஸ் தாக்கும்..!
இந்நிலையில் தாடி வைத்திருக்கும் ஆண்களை கொரோனா வைரஸ் ஈசியாக தாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் ஆண்கள் கிளீன் சேவ் செய்து இருப்பது நல்லது என கூறப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க மாஸ்க் அணிந்து கொள்ளும் போது அடர்த்தியாக தாடி வைத்திருப்பவர்கள் முடி மாஸ்க்கையும் மீறி வைரஸ் உள்புக வழிவகை செய்கிறது.
இதனால் ஆண்கள் கிளீன் சேவ் செய்து தங்களை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |