கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனாவின் 3வது அலை வீசக்கூடும், அதை தடுப்பது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் 3-ஆவது அலை
கொரோனா வைரஸ் உருமாறுவதன் காரணமாக கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க முடியாது என மத்திய அமைச்சகம் தெரிவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எப்போது உருமாறும் என்ற விவரம் தெரியாததால் மூன்றாவது அலை எப்போது தொடங்கும் என கணிக்க முடியாது. இதனால் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத வண்ணம் பரவி வருகிறது. இதற்கு உருமாறிய கொரோனவே காரணம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. கொரோனா எவ்வாறு உருமாறும், எப்போது உருமாறும் என்று யாராலும் கணிக்க முடியாது. இதனால் கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் வீசக்கூடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க முடியாமல் இந்திய அரசு தடுமாறி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்போது வேண்டுமானாலும் உருமாறலாம், இதனால் மூன்றாவது அலை எப்போது வேண்டுமாலும் வீசக்கூடும் இதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவிட்டுள்ளது.