மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் மத்திய அரசால் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் 19 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மட்டுமே பயனடைய முடியும். இந்த திட்டத்திற்கான பலனை பெற விரும்பும் கர்ப்பிணி பெண்கள் https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விவரங்களை தெரிந்து விண்ணப்பிக்கலாம்.