ஊரடங்கில் மது விற்பனை தேவையா?? கொந்தளிக்கும் ஐகோரட்!!

0

கொரோனா கால அவசர தடுப்பு நடவடிக்கைகள் பல மேற்கொள்ளும்போதும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மதுவிற்பனைக்கு தடை விதிக்காதது ஏன் என மத்திய மற்றும் மாநில அரசு பதில் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனையா மக்களின் வாழ்க்கையா??

இரண்டாம் அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்த  மத்திய மற்றும் மாநில அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மது விற்பனைக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்காதது ஏன் என  மத்திய மற்றும் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2ம் அலையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டும் 100க்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டும் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


இந்த பேரிடர் காலத்தில் கடைகடைகளுக்கு நேரம் குறைப்பு மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல தடை என அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகையில் மது விற்படைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்பது மக்களின் மீது அக்கறை இல்லை என்பதை எடுத்துரைக்கிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமானது. அதனை அளிக்கும் மதுபான விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது முறையானதே என மனுதாரர் அறிவித்த நிலையில் மதுபான கடைகள் மூடுவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

                           Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனிடையே நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நேரத்துக்கு பதில் இனி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது செயல்படும் 9 மணி நேரத்துக்கு பதில் 4 மணி நேரம் வரை மட்டுமே கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here