பணமோசடி வழக்கு – வனிதா பட நடிகர் அதிரடி கைது!!

0

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற சுயேட்சை வேட்பாளரான ஹரி நாடார் பண மோசடி புகாரில் சிக்கி அதிரடியாக கைது செய்ப்பட்டுள்ளார். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரி நாடார்:

தமிழகத்தில் தனது தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ஹரி நாடார். இவர் தன் கழுத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிதிருப்பவர். இதனால் இவரை நடமாடும் நகைக்கடை என்று சிலர் கூறுவர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இவர் சுயேட்சை வேட்பாளராக நின்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் பனங்காட்டு படை என்னும் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டார். அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இவரே. தமிழகத்தில் நடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற சுயேட்சை வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார் ஹரி நாடார். தற்போது இவர் கேரளாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் – மத்திய அமைச்சரவை அதிரடி!!

அதன்படி ஹரிநாடார் சுமார் ரூ.16 கோடி மோசடி புகாரில் சிக்கி கேரளா மாநிலம் கோவளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரி நாடாரை கைது செய்த போலீசார் பெங்களூருவுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் பிக் பாஸ் பிரபலம் வனிதாவுடன் ஓர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here