ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் – மத்திய அமைச்சரவை அதிரடி!!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் ஏழை எளிய மக்கள் பல்வேறு கட்ட இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உணவு தானியம்:

சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்திய மக்களை மிக கொடூரமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் பல மக்கள் உணவிற்காக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உணவு தானியம் வழங்கப்படும் என்று ஓர் ஆறிவிப்ப்பை வெளியிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக இருந்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நாளை முதல் பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க தடை – தெற்கு ரயில்வே அதிரடி!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தலா 5 கிலோ உணவு தானியம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்த திட்டத்தினால் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இதற்கு சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here