கடந்த சில வருடங்களாக இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது மீண்டும் ஆட்டிப்படைக்க துவங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உருமாற்றம் அடைந்த ஜே என்1 வகை கொரோனா வைரசும் இப்போது இந்தியாவில் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதனால் இனி வரும் நாட்களில் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.