சென்னையில் மிக்ஜம் புயலை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் பள்ளி கல்வித்துறை தென் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என தெரிவித்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்பின் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அரையாண்டு தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 11ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா.., ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்று உறுதியா??