Thursday, May 9, 2024

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

Must Read

கடந்த மாதம் தமிழக அரசு கலாச்சார, மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியது. அதனை தற்போது ரத்து செய்துள்ளது. கொரோனா நோய் பரவல் பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கி வருவதால் அரசு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் மக்களின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் அக்டோபர் மாத இறுதியில் தமிழக அரசு நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

100 பேருக்கு மிகாமல் எந்த கூட்டம் வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தேர்தல் நெருங்க உள்ள நிலையில் பல அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடைபெற்றது. சமீபத்தில் கூட பாரதிய ஜனதா கட்சி சார்பில் “வேல்” யாத்திரை பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதே போல் மதம், கல்வி சார்பான கூட்டங்கள் என்று அனைத்தும் நடைபெற்றன. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக தற்போது இந்த அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தடை உத்தரவு:

இது குறித்து அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், “வெளிநாடுகளில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலையாக பரவி வருகின்றது. அதே போல் தமிழகத்தில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றவது கிடையாது என்றும் அரசுக்கு தற்போது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அரசு சார்பில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது”

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தடை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -