முல்லைக்கு முத்தம் கொடுத்த கதிர் – எப்படியோ ரொமான்ஸ் சீன் வந்துருச்சு!! குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரசியமான கதை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சீரியலில் அனைவர்க்கும் விருப்பமான ஜோடியான கதிர், முல்லைக்கு எப்பொழுது தான் ரொமான்ஸ் சீன் வரும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் நேற்றைய எபிசோடில் ரசிகர்கள் பலருக்கும் கதிரின் செய்கை ஏமாற்றத்தையே தந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாள் கதிருக்கும், முல்லைக்கும் எப்பொழுது தான் காதல் காட்சிகள் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கையில் நேற்றைய எபிசோடில் அவர்களுக்கு தெரியாமல் தனம், மூர்த்தி மற்றும் ஜீவா நல்ல நேரம் பார்த்து முதலிரவிற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கதிரை ஜீவா எதுவும் சொல்லாமல் ரெடி ஆக சொல்ல இந்த பக்கம் முல்லையை தனம் ரெடி ஆக்க எதுவும் புரியாமல் கதிர் முல்லை குழப்பத்தில் இருந்தனர். இறுதியில் இருவரையும் ரூமிற்கு அழைத்து செல்ல அப்பொழுது தான் அவர்களுக்கு விஷயமே தெரிய வருகிறது. முல்லை வெட்கப்பட்டு பார்க்க கதிர் நெருங்கி செல்ல ரசிகர்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க எதிர்பாராத விதமாக மழையும் பெய்ந்தது.

கதிர் திடீரென கடையில் அரிசி முட்டை நனைந்து விடும் என முல்லையை அங்கேயே விட்டு செல்கிறார். மேலும் வெளியே வந்த கதிரை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க எங்கே செல்கிறாய் என்று அனைவரும் கேட்க பதில் சொல்லாமல் கதிர் வேகமாக செல்கிறார். என்ன நடக்கிறது என்று அனைவரும் குழப்பத்தில் இருக்க தனம் முல்லையிடம் சென்று விசாரிக்க முல்லை அழுதுகொண்டு நடந்தவற்றை கூறுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் மற்றவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். அப்பொழுது கதிர் உள்ளே வர அனைவரும் திட்டி தீர்க்கின்றனர். கதிர் முல்லையை பார்க்க உள்ளே செல்ல முல்லை திரும்பி படுத்துக்கொள்கிறார். மேலும் கதிர் முல்லையை கூப்பிட கோவத்தில் திரும்பவும் இல்லை. அதன் பின் கதிர் தூங்கி விட முல்லை தேம்பி அழுகிறார். காலை விடிந்ததும் முல்லை குளித்து விட்டு வருகிறார்.

அப்பொழுது குளித்து விட்டு வரும் கதிர் முல்லையை பார்த்து தான் செய்தது தவறு தான் என கூறி மன்னிப்பு கேட்கிறார். அதன் பின் முல்லையின் கையை பிடிக்க அதற்கு மேல் முல்லையின் கோவமும் தாக்குப்பிடிக்கவில்லை. கதிர் முதலிரவு காலையில் நடந்தால் எதுவும் தப்பா? என்று கேட்க முல்லை வெட்கப்பட்டு தலைகுனிய இருவரின் முதலிரவும் இனிதே நடந்து முடிகிறது. எப்படியோ கடைசியாக ரசிகர்கள் எதிர்பார்த்த கதிர், முல்லை ரொமான்ஸ் நடந்து முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here