இன்டர்நெட் பேங்கிங் வைத்திருப்பவர்களா நீங்கள்? உடனடியாக உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள பிறந்தநாள் மற்றும் மொபைல் நம்பரை நீக்குவது நல்லது. இந்த இரண்டை வைத்து உங்கள் பேங்க் அக்கவுண்டை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.
டிஜிட்டல் உலகம்:
இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும் உலகமே நம்ம கையில் தான் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மொபைலில் நிறைய நல்ல விசயங்கள் உள்ளது, அதற்கு ஈடாக நிறைய தேவையில்லாத விசயங்களும் உள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. நம்மை பற்றி எளிதாக தெரிந்து கொள்ள நிறைய சமூக ஊடகங்கள் இருக்கிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல், இன்றைய ஹேக்கர்ஸ்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள பெயர், மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போதும். உங்கள் பணத்தை அவர்கள் அசால்டாக எடுத்து விடுவார்கள். எனவே நெட் பேங்கிங் வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை மாற்றி விடுங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய போகிறவர்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள பிறந்த தேதி மற்றும் நம்பரை தெரிந்து கொள்வார்கள். இந்த தகவலை வைத்துக் கொண்டு வருமான வரித்துறை இணைதளத்திற்கு சென்று உங்கள் செல்போன் எண்ணை பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பான் கார்டு தகவல் கிடைத்துவிடும்.
பின்பு மொபைல் போன் திருடுபோனதாக காவல் துறையில் புகாரை கொடுத்துவிட்டு, அங்கு ஒரு எப்.ஐ.ஆ பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். அதை வைத்து இணையதளத்தில் Forgot Password கொடுத்து பின் நம்பரை மாற்றி எளிதாக உங்கள் பணத்தை அவர்கள் அக்கவுண்டிற்கு மாத்தி விடுவார்கள். எனவே உடனடியாக உங்கள் பேஸ்புக் தகவல்களை நீக்கி விடுவது நல்லது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.