‘இந்த போட்டியில் கலந்துக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு’ – கண்ணம்மாவை கண்டபடி கிழிக்கும் பாரதி!!

0

வெண்பாவின் சதியால் ரெசார்ட்டுக்கு வரும் பாரதி, கண்ணம்மாவை சௌந்தர்யா குடும்பத்தினருடன் பார்த்து விடுகிறார். ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜா ராணி’ மகா சங்கமத்தில் அடுத்தடுத்து உருவாகப்போகும் புது பிரச்சனைகள் என்ன என்பது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது.

மகா சங்கமம்

இன்றைய மகா சங்கமத்தில் சௌந்தர்யா சிறந்த மாமியார், மருமகள் போட்டிக்கு சென்றிருப்பதாக பாரதியிடம் கூறுகிறார் வெண்பா. சௌந்தர்யா, கண்ணம்மாவுடன் சேர்ந்து அந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறாள் என வெண்பா கூற அதை உடனடியாக தடுக்க வேண்டும் என கோபமாக ரெசார்ட்டுக்கு கிளம்புகிறார் பாரதி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரெசார்ட்டில் கண்ணம்மாவின் ரூமுக்கு வருகிறார் சௌந்தர்யா. கண்ணம்மாவின் குழந்தை லட்சுமியை கொஞ்சும் சௌந்தர்யா, கண்ணம்மாவை கவனித்து கொள்வதற்காக துளசிக்கு நன்றி கூறுகிறார். கண்ணம்மா பாரதியின் வீட்டில் இருந்தபோது நடந்தவற்றை நினைத்து வருத்தப்படுகிறார் சௌந்தர்யா.

நான் இந்த நிலைமையில் கூட தைரியமாக இருப்பதற்கு நீங்க தான் காரணம் அத்தை என கூறும் கண்ணம்மாவை சௌந்தர்யா மடியில்படுக்க வைத்து கோதி விடுகிறார். பின்பு ரூமுக்கு வெளியே தனியாக உட்கார்ந்திருக்கும் சந்தியாவிடம் கண்ணம்மா பேசிக்கொண்டிருக்கிறார்.

9 வருடத்திற்கு முன்பு இதே தினத்தில் நிகழ்ந்த சோகம் – மெமரிஸ் பிரிங் பேக்!!

காலையில் செய்த உதவிக்காக நன்றி கூறும் கண்ணம்மாவிடம் பேசும் சந்தியா தன் வாழ்க்கையில் நடந்தவற்றை பரிமாறிக்கொள்ளுகிறாள். தனது திருமணம் பற்றி சந்தியாவிடம் வருந்தி கூறுகிறார் கண்ணம்மா. கண்ணம்மாவின் கதையை கேட்டு கண்ணீருடன் வருந்துகிறார் சந்தியா.

வாழ்க்கையை பற்றி அழகான விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். காலையில் லட்சுமியை கராத்தே வகுப்பில் சேர்த்து விட வருகிறார் துளசி. அப்போது சௌந்தர்யாவை பார்க்கும் லட்சுமி, சௌந்தர்யாவை பாட்டி என கூப்பிட்டு பேசுகிறார்.

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகும் நடிகை – இதுதான் காரணமா??

பின்பு சௌந்தர்யா குடும்பத்தினருடன் கண்ணம்மா பேசிக்கொண்டிருக்கிறார். அங்கு வரும் பாரதி, சௌந்தர்யா கண்ணம்மாவுடன் இருப்பதை பார்த்து விடுகிறார். அப்போது பாரதி, சௌந்தர்யா இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த போட்டியில கலந்து கொள்ள உனக்கு என்ன தகுதி இருக்குது, இதயெல்லாம் பண்றதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கு என கண்ணம்மாவை கத்துகிறார் பாரதி.

பாரதி பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கண்ணம்மா ஏய் வாயமூடு என திரும்ப கத்தி விட்டு பாரதி பேசியதுக்கெல்லாம் பதிலடி கொடுக்கிறார். நடக்கும் சண்டையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் சௌந்தர்யாவின் முழு குடும்பமும் செய்வதறியாமல் பரிதவித்து நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here