அப்பா துபாயில் தான் இருக்காரா?? கண்ணம்மாவை சந்தேகப்படும் லட்சுமி!! விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று துர்கா உண்மை தெரியாமல் ஹேமா, கண்ணம்மாவை போலவே இருக்கிறார் என்று சொல்லிவிட வெண்பாவிற்கு முன்பைவிட சந்தேகம் அதிகமாகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் லட்சுமி, கண்ணம்மாவிடம் தனது அப்பாவை பற்றி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஊரை விட்டு வந்து சென்னையில் துளசியின் வீட்டில் லட்சுமியுடன் தங்குகின்றார். மேலும் கண்ணம்மா தையல் தொழில் செய்யலாம் என்றும் முடிவெடுக்கிறார். அதற்கு போர்டு எழுதும்போது லட்சுமி குறைந்த விலையில் கொடுப்பதை விட அதிக விலைக்கு கொடுத்தால் தான் கட்டுப்படியாகும் என்று சொல்ல கண்ணம்மாவும், துளசியும் லட்சுமியை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்படியே பார்ப்பதற்கு குணத்திலும், அறிவிலும் சௌந்தர்யாவை உரித்து வைத்திருக்கிறார் லட்சுமி. இன்றைய எபிசோடில் பாரதியை ரத்த தானம் அளிக்க அழைக்கிறார் வெண்பா. ஏற்கனவே துளசியின் தலைமுடியை எடுத்தாச்சு, இப்பொழுது பாரதியின் ரத்தத்தை வைத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் ஹேமா யார் குழந்தை என்ற உண்மை தெரிந்து விடும் என்று திட்டமிடுகிறார்.

அப்பொழுது பாரதி அங்கு வர ரத்த தானத்தை பற்றி பேசிக்கொண்டுள்ளார். அப்பொழுது துர்காவிடம் இருந்து கால் வர பாரதி இருப்பதை பார்த்து பதட்டமடைகிறார். பாரதியும் என்ன என்று கேட்க வெண்பா சித்தப்பா அமெரிக்காவில் இருந்து கால் செய்கிறார் என்று சொல்கிறார். அடுத்ததாக துர்கா I Love U என்று நோயாளியிடம் லெட்டரில் அனுப்புகிறார்.

வரலாற்றில் இன்று’ – மக்கள் திலகம்’ எம்ஜிஆர் 33வது நினைவு தினம்!!

இதனால் வெண்பாவிற்கு மேலும் பதட்டமாகிறது. அப்பொழுது பாரதிக்கு கால் வர ஒரு அவசரமான விஷயம் என்று சொல்லி ரத்தம் கொடுக்காமலேயே கிளம்புகிறார். மேலும் சௌந்தர்யா மெடிக்கல் கேம்ப் விஷயமாக மேனேஜரிடம் பேசிக்கொண்டுள்ளார். எப்படியாவது கண்ணம்மாவை கண்டுபிடித்து விட வேண்டும் என்று ஒவ்வொரு கிராமமாக தேடி கேம்ப் போட சொல்கிறார்.

அப்பொழுது அங்கு வேணு வர கண்ணம்மா சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படுகிறாள். அவளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்கிறார். எதையுமே சௌந்தர்யா கேட்பதாக இல்லை. அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட லட்சுமி ஒரு சிறுமியை அழைத்து வந்து இவளின் அப்பாவும் துபாயில் தான் உள்ளார்.

அவளின் அப்பாவிடம் பேசும்போது, எனக்கும் சொல்ல கண்ணம்மாவிற்கு கஷ்டமாகிறது. எப்படியோ சொல்லி சமாதானம் செய்து அனுப்புகிறார். அஞ்சலி அம்மா சௌந்தர்யாவின் வீட்டிற்கு வர அஞ்சலி அழுதுகொண்டிருப்பதாக சொல்லி ஏன் இப்படி பண்ணீங்க என்று சண்டையிடுகிறார். சௌந்தர்யா நடந்தவற்றை எடுத்து சொல்ல அமைதியாகிறார் அஞ்சலியின் அம்மா. இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here