பல சுவாரசியமான மற்றும் அதிரடியான திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா” ஒளிபரப்பாகி வருகின்றது. நாளுக்கு நாள் அதிகமான விறுவிறுப்பான காட்சிகளுடன் சென்று கொண்டு இருக்கிறது. இன்று கதையின் வில்லி வெண்பா உச்ச கட்டமாக கண்ணம்மாவை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.
கண்ணம்மாவின் புதிய வேலை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும்படி சௌந்தர்யா, கண்ணம்மாவை வற்புறுத்துகிறார். அதேபோல் மறைமுகமாக கண்ணம்மாவிற்கு உதவ நினைத்து பெட்ரோல் பங்கில் தன் மருமகளுக்கு அதிக சம்பளம் தரும் படி கூறுகிறார். இதனை உணர்ந்து கண்ணம்மா அவ்விடத்தை விட்டு வெளியேறி ஆசிரமம் ஒன்றிற்கு செல்கிறார். அங்கே கர்ப்பிணி என்றும் பாராமல் கோமதி என்ற ஆஸ்ரமத்தின் தலைவி அவரை வேலை வாங்குகிறார்.
இப்படியாக இருக்க, சௌந்தர்யா நடந்த அனைத்தையும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். தனது கணவருடன் ஒரு முறை கண்ணம்மாவை அவர் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அங்கு சென்று பார்க்கும் போது கண்ணம்மா அனைத்து கடினமான வேலைகளையும் செய்கிறார். இதனை பார்த்து சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் வெதும்பி போகின்றனர். தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்று கண்ணம்மா கோமதியிடன் கூறுகிறார்.
ஆனால், கோமதி அவரை ஆசிரமத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதனை ஒளிந்து நின்று சௌந்தர்யா கலங்கிய கண்களுடன் பார்க்கிறார். அப்போது வேலை முடித்து செல்லும் கண்ணம்மா தனது கைக்குட்டையை தவற விடுகிறார். அதனை சௌந்தர்யா எடுத்து வைத்து கொள்கிறார். இது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
புதிய சதி திட்டம்:
பின், கோமதி ஆசிரமத்தில் உள்ள பெண்ணிடம் குழந்தைக்கு பால் தர முடியாது என்று கூறிவிட்டு, அந்த பாலை பணத்தினை பெற்று விற்று விடுகிறார். இதனை பார்த்து ஆவேசம் அடையும் கண்ணம்மா ஏழைகளுக்காக நடத்தப்படும் இந்த ஆசிரமத்தில் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்றும் தான் இதனை பார்த்தால் வேறு விதமாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவிட்டு செல்கிறார்.
இதனை வெண்பா ஒளிந்து நின்று பார்த்து விட்டு கோமதியுடன் பேச்சு கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த கோமதி கண்ணம்மாவை கொலை செய்யும் கோபத்தில் இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு வெண்பா எனக்கும் அது தான் வேண்டும் என்று சொல்கிறார். இதனால் கோமதி குழம்பும் அடைந்து வெண்பாவை பார்க்கிறார்.
ஆனால், வெண்பா கண்ணம்மாவை தனக்கு பிடிக்காது என்றும் அவரை என்ன வேண்டுமாலும் செய்து கொள்ள பணத்தை தன்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறுகிறார். தற்போது வெண்பா கண்ணம்மாவை கொலை செய்யும் அளவிற்கு துணிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சதி திட்டங்கள் பாரதிக்கு எப்போது தெரிய வரும்?? சௌந்தர்யா சதியை முறியடிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.