கொரோனா ஊரடங்கு காரணமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இன்றைய விலை:
உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. இதனால் பிற பங்குகள் சரிந்ததால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தது. இதன் காரணமாக அதன் தேவை அதிகரித்து விலையும் பன்மடங்கு உயர்ந்தது. ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறாத போதிலும், தங்க விலை உயர்ந்து கொண்டே சென்றதற்கு இதுதான் முக்கிய காரணம். சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி செயல்பாடுகள் தொடங்கி உள்ளதால் விலை சற்று குறையத் தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் ரூபாய் இருந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தற்போது 39 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இது பொதுமக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.
5ஜி வசதியுடன் ஐபோன் 12 அறிமுகம் – இந்திய வேரியண்ட் & விலை விபரம்!!
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராம் ரூ.4,836க்கும், சவரன் ரூ.376 குறைந்து ரூ.38,704க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64 ஆகவும், இரு கிலோ ரூ.64,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.