இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 11 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அந்த வகையில், நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் லக்னோ அணியை எதிர்த்து கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை அணியும் விளையாடினர்.
தமிழக வெள்ள நிவாரண நிதி தொடர்பான அவசர வழக்கு., உச்சநீதிமன்றம் உறுதி!!!
இந்த போட்டிகளின் முடிவில் சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.