வெண்பாவின் சதியால் உயிருக்கு போராடும் கண்ணம்மா – காப்பாற்றுவாரா பாரதி??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது இத்தனை நாட்கள் நாம் அனைவரும் காத்திருந்த காட்சிகள் இடம்பெற உள்ளது. கண்ணம்மா வெண்பா கொடுத்த விஷ மருந்தால் ரோடில் மயங்கி விழுகிறார். உயிர் பிழைப்பாரா?? இல்லையா?? என்பதே இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி மருந்தை கண்ணம்மாவிற்கு விடாப்பிடியாக கொடுக்கிறார். முன்பை விட அதிக மயக்கம் மற்றும் இருமல் ஏற்படுகிறது கண்ணம்மாவிற்கு. சமையல் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு செல்கிறார் கண்ணம்மா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்படுகிறது. ஆட்டோ டிரைவர் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று அழைக்க அந்த வழியில் துளசியும் வருகிறார். துளசியுடன் மருத்துவமனைக்கு செல்வதாக சொல்லுகிறார் கண்ணம்மா. துளசி கண்ணம்மாவை கைத்தாங்கலாக அழைத்து செல்ல மயக்கமடைந்து கீழே விழுகிறார் கண்ணம்மா.

ரோடில் உள்ள அனைவரும் வந்து விடுகின்றனர். கண்ணம்மாவின் நாடி துடிப்பும் குறைந்து விடுகிறது. அந்த வழியே பார்த்து பாரதி வர கண்ணம்மாவை பார்த்து எரிச்சலடைகிறார். அங்கிருந்து செல்ல முற்பட துளசி பாரதியிடம் கண்ணம்மாவை காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.

இன்று முதல் 13 ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம்!!

கண்ணம்மாவை செக் செய்து விட்டு காசு கொடுத்து அனுப்ப பார்க்கிறார். துளசி தொடர்ந்து கெஞ்ச வேறு வழியில்லாமல் ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார் பாரதி. கண்ணம்மாவின் நிலையை அறிய ஸ்கேன் செய்கிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடையும் பாரதி துளசியிடம் நிலைமை கைமீறி போவதையும் சொல்லுகிறார்.

அந்த பக்கம் துளசி கண்ணம்மாவிற்கு ஒன்று என்றால் பாரதியை கடவுள் அனுப்பி வைத்து விடுகிறார். இதிலிருந்தே உங்களின் ஒற்றுமை தெரிகிறது என்று கண்ணீர் விடுகிறார் துளசி. தொடர்ந்து கண்ணம்மா சீரியஸான நிலைமையிலேயே இருக்கிறார்.

கண்ணம்மாவை பாரதி காப்பாற்றுவாரா?? சௌந்தர்யாவிற்கு விஷயம் தெரிய வருமா?? என பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது. அடுத்த எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here