இன்று முதல் 13 ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம்!!

0

தமிழகத்தில் இன்று முதல் வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

13 ம் தேதி வரை வறண்ட வானிலை

சென்னை வானிலை மையத்தின் மதிய நேர அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளில் இன்று செவ்வாய் கிழமை முதல் சனிக்கிழமை வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வடமேற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தெறிக்கவிட்ட விஜயின் மாஸ்டர் படத்தின் சாதனை – ரூ.200 கோடியை தாண்டிய வசூல் வேட்டை!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், வடகிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here