தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை செல்லில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சூழல்களை பற்றி பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்வாரிலால் புரோஹித்:
தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் பலருக்கு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரும் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டார். பல மாதங்களாக பிரதமரை சந்திக்காத ஆளுநர் இன்று திடிரென்று ஆளுநரை சந்தித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கு தமிழக ஆளுநர் சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதற்காக ஆளுநரை நேரிலும் சந்தித்து பேசி இருந்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இப்படியான நிலையில் நேற்று தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அவரை நேரில் சந்தித்து பேசினார். இதனை அடுத்து இன்று டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பாஜக வேல் யாத்திரை, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உட்பட பல விவகாரங்களை பற்றி பேசியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த திடீர் சந்திப்பு அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல், ஆளுநர் அடுத்ததாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தொடர்ச்சியாக 3 நாட்கள் டெல்லியில் தான் இருக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் பிரதமரை நேரில் சந்தித்து 8 மாதங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.