இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது என்று கேரளா அரசு அறிவித்தது. சி.பி.ஐ க்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் பொது ஒப்புதலை ரத்து செய்யவேண்டும் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
பொது ஒப்புதல்
மத்திய அரசு அமைப்பான சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்க எந்த மாநிலங்களிலும் சென்று விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு பொது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து சி.பி.ஐ.எந்த மாநிலத்திற்கும் அனுமதி கேட்காமல் விசாரணைக்கு சென்று விடலாம். அனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கலான ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சி.பி.ஐ.க்கு.வழங்கி இருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன.
தற்போது சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்ய கேரள அரசு முடிவெடுத்துள்ளது. எனவே சி.பி.ஐ.அதிகாரிகள் அனைவரும் மாநில அரசின் அனுமதியின்றி விசாரணைக்கு வரமுடியாது என்று அறிவித்துள்ளது.கட்டாயமாக மாநில அரசின் உத்தரவு இருந்தால் மட்டும் தான் விசாரணை மேற்க்கொள்ள முடியும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.