இந்து மத கடவுளான முருகனை பற்றியும் அவரை துதித்து சொல்லப்படும் பாடலுமான கந்த சஷ்டி கவசத்தை பற்றி இழித்து கூறிய யூ – டிப் சேனல் ஆன கருப்பர் கூட்டத்திற்கு எதிராக நடிகர்கள் நட்ராஜ் மற்றும் பிரசன்னா ட்விட்டர் இல் வெளுத்து வாங்கி உள்ளனர்.
முருகனை துதிக்கும் “கந்தர் சஷ்டி கவசம்”:
முருகன், இந்து மதத்தை சேர்ந்த மக்களால் துதிக்கப்படும் கடவுள் ஆவர். அவர் மீது தமிழகத்தை சேர்ந்த பல பாடல்களை பாடியுள்ளனர். அதில் மிகவும் குறிப்பிடப்படும் பாட்டு “கந்தர் சஷ்டி கவசம்” இந்த பாடல் அருணகிரிநாதரால் இயற்றப்பட்டது. இதை கர்நாடக இசை கலைஞர்கள் பல ராகங்களில் மெட்டுகளிலும் பாடி உள்ளனர்.
இப்படியான இந்த பாடலை “கருப்பர் கூட்டம்” என்னும் யூ – டிப் சேனலை சேர்ந்த சிலர் அவதூறு தெரிவித்து வந்தனர்.
இது ஒரு “ஆபாச புராணம்” என்று பரப்பி வந்தனர். இது பலரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பலரும் கண்டன குரல்களை எழுப்பி வந்த வண்ணம் இருந்தனர்.
பிரபலங்களின் ட்வீட்:
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ” அவர் அவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. கொச்சைப்படுத்தியவர்களை கேள்வி கேட்பதும் தவறு. இப்படி மற்றவர் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு சரியானது அல்ல.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கூடுதலாக நடிகர் நட்ராஜ் ” போங்கடா முட்டாள்களா.. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்ல.. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்ல..முருகனை பற்றி பேச யாருக்கும் அருகத்தையே இல்ல. சரவணபவாய நமஹா.. வெற்றிவேல் வீரவேல்” என்று தனது டீவீட்டில் பதிலடி கொடுத்து உள்ளார்.