நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை தனக்கு தேவை என்ற காரணத்தால் கட்சியாக மாற்றிருக்கிறேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தன் பெயரையோ, தன் இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அவர் இவ்வாறாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பரபரப்பு:
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியினை பிடித்து ஐந்து ஆண்டுகள் தமிழகத்தையும், தமிழக மக்களையும் ஆள போகிறது என்ற குழப்பம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையுலகில் உள்ள நடிகர்கள் அரசியலுக்கு வருவது சகஜமான ஒன்று.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அப்படியாக இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் கமல் ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அதே போல் முன்னணி நடிகரான ரஜினிகாந்த இந்த ஆண்டும் கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் இல்லை என்று தான் தெரிகிறது. இதனால், அனைவரும் நடிகரான விஜய் கட்சி ஆரம்பிக்கும் நோக்கில் இருக்கிறாரா?? என்று பார்த்தனர்.
அவர்களது எண்ணத்தை பிரதிபலிப்பது போலவே அவர் சில நாடுகளுக்கு முன் தனது “விஜய் மக்கள் இயக்கம்” நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல் இதனை மேலும் உறுதி செய்வது போல் நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த விண்ணப்பத்தில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
விஜய் அறிக்கை:
இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இது குறித்து விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டதாவது “இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரான எந்த தந்தை ஆரம்பித்து இருக்கும் புதிய கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம்” இவ்வாறாக சொல்லி இருந்தார்.
அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பாவிற்கு மிரட்டல் கடிதம் – போலீசார் விசாரணை!!
இதற்கு தற்போது அவரது தந்தையான சந்திரசேகர் கூறியிருப்பதாவது, “நடிகர் விஜயின் மக்கள் கட்சி இயக்கத்தை தனக்கு தேவை என்ற காரணத்தால் கட்சியாக மாற்றிருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கவே கட்சி தொடங்கியிருக்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.