பயில்வான் ரங்கநாதன் வனிதா பற்றி பேச நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோருக்குத் தகுதியே இல்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வனிதா-பீட்டர் பால் திருமண சர்ச்சை
ட்விட்டரில் சில நாட்களாகவே வனிதா, பீட்டர் பால் அவர்களின் திருமணம் குறித்த விவாதமாகத் தான் இருக்கிறது. நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்தார்கள். மேலும் நாஞ்சில் விஜயன், இயக்குனர் ரவீந்திரன், சூர்யா தேவி ஆகியோரும் இதில் அடக்கம்.
இதையும் படியுங்கள் ⇒⇒ கொரோனாவை அடுத்து டெங்குவிற்கு முதல் பலி – சென்னையில் பயங்கரம்!!
பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் வனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாக ஏன் வலைத்தளத்தில் பேச வேண்டும்? அவர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார், சட்டம் ரீதயாக தீர்வு கிடைக்கும்.ஆனால் இடையே உள்ளே புகுந்து விவாதம் செய்ய, இது டிவி நிகழ்ச்சி கிடையாது என, லட்சுமி ராமகிருஷ்ணனை தாக்கி பேசியுள்ளார்.
அவர் மட்டும் என்ன யோக்கியமா??
முதலில் அடுத்தவர் பற்றி பேசும் போது நாம் யோக்கியமா என்பதை நினைத்து பார்த்து பேச வேண்டும் என வனிதாவுக்கு எதிராக பேசும் அனைவரையும் விமர்சித்துள்ளார். நானும் ஒரு நடிகன் தான், யார் எப்படி என்பது எனக்கும் தெரியும். நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது வனிதாவின் விஷயத்துக்கு நான்கு பேர் விவாதம் செய்வது தேவை இல்லை என கூறியுள்ளார்.
வனிதாவுக்கு கண்டனம்
மேலும் அவர் வனிதாவும் தன்னுடைய யூடியூப் சேனலை ப்ரமோட் செய்யும் நோக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களையும், பதிவுகளையும் வெளியிட்டு வருவது கண்டிக்கத் தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.