தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கடுமையாக விமரிசனம் செய்து வருகின்றனர். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வருகிற செவ்வாய்க்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் மிக பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் மற்ற கட்சிகள் மற்றும் தனி நபர் விமனர்சனமும் நாளுக்கு நாள் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் குறித்து ராசாவின் பேச்சு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தமிழகத்தில் பிரச்சாரத்தின் பொழுது திமுக மற்றும் அதிமுக கட்சியினர் மிக கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். ஸ்டாலின் எடப்பாடியை பற்றி விமர்சிப்பதும் அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை குறித்து விமர்சிப்பதும் என தொடர்ந்து இந்த நிகழ்வு அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பிரச்சாரத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமி திமுகவை வீழ்த்துவதற்கு எனது உயிரையும் கொடுப்பேன் என்று கூறினார்.
திருச்சியில் சட்டமன்ற தேர்தல் நிறுத்தமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!
இதற்கு ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி உயிரை எல்லாம் கொடுக்க வேண்டாம். அவர் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். அப்போது தான் திமுக எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்கிறது என்பதை காணமுடியும் என்று தெரிவித்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொல்லித்தான் நாங்க வாழப்போறோமா?? என்று கூறியுள்ளார்.