தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வருவதால், பெரும்பாலானோர் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வந்தது. இதனால் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு, காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!
இந்நிலையில் காட்டுத்தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பூம்பாறை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு, இன்று (மே 4) முதல் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.