தற்போது ஹைதராபாதில் இருந்த சென்னை திரும்பிய ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது “ரஜினியின் அரசியல் கட்சியின் பெயர், சின்னம் குறித்த தகவல்கள் திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 31ல் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் :
சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவது போல் தெரிகிறது. மேலும் கட்சியின் பெயர், சின்னம் குறித்த தகவலை வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி, படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினி தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டார். அதன் பின் ரத்த அழுத்த கோளாறு காரணமாக ரஜினி ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் 3 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் கொரோனாகான பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹைதராபாதில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து தனது கார் மூலம் தனது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தடைந்தார் ரஜினி .
மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 இல் தியேட்டரில் ரிலீஸ் – நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் நன்றி!!
அதன் பின் ரஜினியுடன் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனமூர்த்தி சந்திப்பு மேற்கொண்டனர். அப்போது ரஜினியின் உடல் நலத்தை கேட்டறிந்துகொண்டனர். அதன் பின் பேட்டியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன் கூறியதாவது “முன்பு திட்டமிட்டபடியே வரும் டிசம்பர் 31ல் கட்சியின் பெயர், சின்னம் குறித்த தகவகல்கள் வெளிவரும். மேலும் இதனை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பார்” என்று கூறியுள்ளார்.