Tuesday, May 7, 2024

6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!!

Must Read

வங்கக்கடலில் உருவான “புரெவி” புயல் தற்போது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் கரையை டிசம்பர் 4 ஆம் தேதி கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“புரெவி” புயல்:

கடந்த மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது “புரெவி” புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் குமரி மற்றும் பாம்பன் பாலங்களுக்கு இடையே டிசம்பர் 4 ஆம் தேதி கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புயலிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் குண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, “பாம்பனுக்கு தென்கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது நாளை வளைகுடா பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு வரும். இந்த புயல் தற்போது 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது.

‘புரெவி’ புயல் எதிரொலி – 10 மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டித் தீர்க்கும்!!

இந்த புயல் காரணமாக நாளை ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிதீவிரமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. கடலூர், நாகப்பட்டினம், புதுவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

புதிய வடிவில் கொள்ளையடிக்கும் கும்பல்., இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருதா? எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடி செயல்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூரை சேர்ந்த ஒரு பெண், 'தான் ஒரு மிகப்பெரிய...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -