சென்னையில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துளளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் போன்ற பிற பங்குகளின் முதலீடுகள் குறைந்த காரணத்தால், தங்கம் & வெள்ளி ஆகிய ஆபரணங்கள் மீதான முதலீடு கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் தங்க நகை விலையும் உயர்ந்து கொண்டே வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று சென்னையில் மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.85 அதிகரித்து ரூ.4,611க்கும், ஒரு சவரன் 680 ரூபாய் உயர்ந்து ரூ.36,888 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.