Monday, May 20, 2024

கண்ணம்மாவின் குழந்தையை ஆசிர்வதிக்கும் பாரதி – பல பாச போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

Must Read

பாரதி கண்ணம்மா சீரியலில் பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. மேலும் கண்ணம்மாவின் விரோதியான கோமதி, இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும்?? என மக்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவும், பாரதியும் அவர்களின் குழந்தைக்கு பெயரை வைத்தனர். பாரதி குழந்தைக்கு ஹேமா என்று பெயர் வைக்க அவருக்கு பழைய நியாபகங்கள் வருகிறது. அங்கு கண்ணம்மா தன் அத்தையின் பெயரை இணைந்தது சௌந்தர்ய லட்சுமி என்று பெயர் சூட்டுகிறார். மேலும் பாரதி குழந்தையிடம் நீ தான் இனிமேல் எனக்கு எல்லாமே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உன் ஆசையெல்லாம் நான் நிறைவேற்றுவேன் என்று கூறி ஹேமாவை தன் குழந்தையாகவே ஏற்றுக்கொள்கிறார். இதனால் சௌந்தர்யா மிகவும் சந்தோஷமடைந்தார். இதனை பற்றி சௌந்தர்யா பேசிக்கொண்டிருக்க அதனை கோமதி கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்ததாக குழந்தை பசியில் அழுக சௌந்தர்யா என்ன செய்தும் நிறுத்தவில்லை. அப்பொழுது அங்கு ஒரு பாட்டி குழந்தை அழுவதற்கான காரணத்தை கேட்க சௌந்தர்யா அனைத்தையும் கூர்கிறார். மேலும் கண்ணம்மாவை பற்றி சொல்லி குழந்தைக்கு பால் கொடுக்க அவரிடம் எடுத்து செல்லும்படி கேட்கிறார்.

அந்த பாட்டியும் ஒத்துக்கொள்ள கண்ணம்மாவிடம் குழந்தையை அழைத்து செல்கிறார். அந்த பாட்டி கேட்டதும் மறுக்க முடியாததால் குழந்தைக்கு பால் கொடுக்க ஒத்துக்கொள்கிறார். குழந்தைக்கு பால் கொடுக்கும்போது கண்ணம்மாவிற்கு ஏதோ ஒரு உணர்வு தோன்ற அந்த குழந்தை கண்ணம்மாவின் சேலையை இறுக்கமாக பிடித்துக்கொள்கிறது. குழந்தையை பிரிய மனமில்லாமல் குழந்தையை தருகிறார்.

மேலும் துர்கா எப்படியோ கோவிலை தேடி கண்டுபிடித்து விடுகிறார். அங்கு வெண்பாவை தேட வெண்பா முதலில் துர்காவை பார்த்து விடுகிறார். அவரை பார்த்து பயத்தில் ஒளிந்து கொள்கிறார். வெண்பாவிற்கு துர்கா கால் செய்ய மொபைலை அணைத்து வைக்கிறார். அந்த சமயம் பார்த்து கோமதி வெண்பாவிற்கு கண்ணம்மாவின் இரட்டை குழந்தை விஷயத்தை சொல்ல கால் செய்கிறார்.

அந்த நேரம் பார்த்து வெண்பாவின் போன் அணைத்து வைக்கப்பட்டிருக்க கோமதி அவரை தேடி அலைகிறார். மேலும் பாரதி போன் பேசிக்கொண்டே எதார்த்தமாக கண்ணம்மா இருக்கும் பக்கம் வர அவரை பார்த்து விடுகிறார். கண்ணம்மாவும் பாரதியை பார்த்து விடுகிறார். இருவரும் கோவமடைகின்றனர். அதன் பிறகு பாரதி கண்ணம்மாவிடம் வந்து சண்டையிடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கிருப்பவர்கள் இவர் யார் என்று கேட்க குழந்தையின் அப்பா என்று சொன்னதும் அவரை கண்ணம்மாவின் பக்கத்தில் நிற்க வைக்கின்றனர். அந்த சமயம் பார்த்து பாரதியால் காப்பாற்றப்பட்ட ஒரு நபர் வந்து பாரதியை விசாரிக்கிறார். மேலும் இது அவரின் குழந்தை என்று யூகித்து குழந்தையை கொஞ்சுகிறார். அவர் குழந்தைக்கு அம்மா அப்பா ஆசிர்வாதம் தான் வேண்டும் கூற வேறு வழி இல்லாமல் கண்ணம்மாவின் கையை பிடித்து குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்கிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த நேரம் பார்த்து துர்கா அங்கே வர கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து விட்டதாக நினைத்து சந்தோசத்துடன் அங்கிருந்து வெண்பாவை தேடி செல்கிறார். ஒருபக்கம் கோமதி வெண்பாவிடம் உண்மையை சொல்ல தேடுகிறார். மறுபக்கம் வெண்பா கழுத்தில் தாலி கட்ட துர்கா தேடி அலைகிறார். இந்நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ என்று மக்கள் பலரும் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டுள்ளனர். வரும் எபிசோடுகளில் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பாப்போம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: கடைசி லீக் போட்டி ரத்து.. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் எவை?? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடரின் 70 வது மற்றும் கடைசி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -